துபாய் சர்வதேச விமான நிலையத்தின் தெற்கேயுள்ள அல் ரஷிதியா பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக அந்நாட்டு போலீசார் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளனர்.
இறந்து கிடக்கும் நபர் காணாமல் போனதாக புகார் ஏதும் வராத நிலையில் இவர் யார்?, எந்த நாட்டை சேர்ந்தவர்?, எப்படி இறந்தார்? என்பது தெரியாமல் இருப்பதால் இதுதொடர்பாக தங்களுக்கு உதவும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவரைப் பற்றிய தகவல் அறிந்தவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறை அவசர உதவி எண்: 04-60 95 555 மற்றும் ரஷிதியா நகர போலீஸ் நிலைய தொலைபேசி எண்: 04-28 53 000 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
முகஅமைப்பை வைத்து பார்க்கும்போது இந்தியரைப்போல் தெரிவதால் ‘மாலைமலர்டாட்காம்’ வாசகர்கள் இந்த செய்தியை சமூக வலைத்தளங்களின் மூலமாக அதிகம் பகிர்ந்து இவரை அடையாளம்காண உதவலாம்.