ஓமங் குமாரின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்ப்ஜித்’ படத்தின் படப்பிடிப்பில் தற்போது பரபரப்பாக இருக்கும் ஐஸ்வர்யா ராய்க்கு பிரெஞ்சு அதிபர் ஹோலண்டேவுடன் நாளை மதிய விருந்தில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
67-வது இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்கு பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார். நாளை நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் இவர் கலந்து கொள்கிறார். அதிபருடன் நாளை மதிய விருந்தில் கலந்து கொள்வதற்காக பிரெஞ்சு தூதர் பிரான்கோயிஸ் ரிச்சியர், சர்வதேச அளவில் ரசிகர்களைக் கொண்ட முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு சிறப்பு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்காக நாளை நடைபெறும் ‘சர்ப்ஜித்’ படப்பிடிப்பிலிருந்து சில மணி நேரம் மட்டும் ஓய்வு எடுத்துக் கொள்ள ஐஸ்வர்யா ராய் முடிவு செய்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.