அஜித் வேதாளம் படத்திற்கு பிறகு காலில் ஏற்பட்ட அடியால் சிகிச்சை பெற்று சில காலம் ஓய்வில் இருந்தார். தற்போது அவர் இரண்டு மாதங்கள் லண்டனில் குடும்பத்துடன் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் அஜித் சிவா இயக்கத்திலேயே அடுத்த படமும் நடிக்க இருக்கிறார் என்பது நமக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயம்.
தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு ஜுன் மாதம் முதல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. ஆரம்பக் கட்ட பணிகளில் இருக்கும் இப்படத்தை அடுத்த வருட பொங்கல் விருந்தாக வெளியிட முடிவு செய்துள்ளனர்.
அஜித், சிவா கூட்டணியில் தயாராகும் இந்த மூன்றாவது படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது.