அவுஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் தியாகிகள் தினத்தன்று கங்காருவின் உடலில் வெடிகுண்டுகளை கட்டி போலீசார் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிராவாத இயக்கத்தின் ஆதரவாளர் திட்டமிட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மெல்போர்ன் நகரில் கடந்த ஆண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஐ.எஸ். தீவிராவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் சிலரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவனான செவ்டெட் பெசிம் என்ற 19 வயது வாலிபனிடம் நடத்திய விசாரணையில் ஒரு புதிய தாக்குதல் முறையை அரங்கேற்ற அவன் திட்டமிட்டிருந்ததை அறிந்த போலீசார் திடுக்கிட்டனர்.
மிகவும் பயங்கரமான வெடிகுண்டுகளை கங்காருவின் உடலில் கட்டிவைத்து, அந்த கங்காருவை போலீசார் இருக்கும் இடங்களை நோக்கி ஓடவிட்டு தாக்குதல் நடத்தவும், போலீசார் அதிகமாக கூடும் இடங்களில் காரில் சென்று அவர்கள்மீது மோதி, சில போலீசாரின் தலைகளை துண்டித்துக் கொல்லவும் அவன் திட்டமிட்டிருந்தான்.
இதுதொடர்பான யோசனையை இணையதளத்தின் மூலம் தனது ஜிஹாதி தோழர்களுடன் அவன் தெரிவித்திருந்தான் என அவுஸ்திரேலிய போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.