நீண்ட வருடங்களாக ஒரு திருப்பு முனைக்காக காத்திருந்தார் அருண் விஜய். இந்நிலையில் அஜித்திற்கு வில்லனாக இவர் நடித்த என்னை அறிந்தால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் புருஸ்லீ படத்தில் வில்லனாக நடித்தார், தற்போது கன்னட படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து ஈரம் அறிவழகன் இயக்கும் ஒரு படம், ப்ரேமம் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் ஒரு படம் என பெரிதும் எதிர்ப்பார்ப்புக்குரிய இயக்குனர்களுடன் கைகோர்த்துள்ளார்.