சிரஞ்சீவி தமிழ் படமான கத்தி ரீமேக்கில் தன்னுடைய 150வது படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வந்தன. படத்திற்காக சிரஞ்சீவி தன்னுடைய லுக்கை எல்லாம் மாற்றி வந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் கதை என்னுடையது என பிரச்சனையை எழுப்பி, எழுத்தாளர் சங்கம் வரை கொண்டு போனார் நரசிம்ம ராவ்.
இதற்குள் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருக்கும் தசாரி நாராயண ராவ் தான் படத்திற்கு பிரச்சனை செய்து வருவதாக பலர் கூறினர்.
இந்த நிலையில், நேற்று எழுத்தாளர் சங்கத்தினர் ஒன்றாக கூடி இப்பிரச்சனை பற்றி பேசியுள்ளனர். விரைவில் படம் தொடங்குவதற்கான செய்திகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.