விதைப்பதை தவிர தண்ணீர் ஊற்றி வளர்த்து அறுவடை செய்வது வரை அனைத்து வேலைகளையும் ரோபோக்கள் மட்டுமே செய்யும் விவசாய பண்ணை ஒன்றை ஜப்பான் நிறுவனம் உருவாக்க முடிவு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு முதல் 4,400 சதுர அடியில் இந்த பண்ணை செயல்பாட்டுக்கு வருகிறது. தொடர்ந்து ஜப்பானில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடுமையான தொழிலாளர் தட்டுப்பாட்டால் தவித்து வருவதை அடுத்து ரோபோ தொழிலாளர்களை பயன்படுத்த ஜப்பான் களமிறங்கியிருக்கிறது.
சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில் 2035-ம் ஆண்டுக்குள் ஜப்பானில் செய்யப்படும் வேலைகளில் பாதி வேலைகள் ரோபோகள் செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.