தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் நடிகர் சிரஞ்சீவி. இவர் சமீபகாலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி, தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். தற்போது, மீண்டும் தெலுங்கு சினிமாக்களில் தலைகாட்ட ஆரம்பித்துள்ளார். அந்த வரிசையில், விரைவில் தெலுங்கில் உருவாகும் ‘கத்தி’ ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், சிரஞ்சீவி திடீரென்று ஒரு சிறிய ஆபரேஷன் செய்துகொள்ள உள்ளார். நீண்ட நாளாக சிரஞ்சீவிக்கு தோள்பட்டையில் வலி இருந்து வந்ததாகவும், அந்த வலியை குணப்படுத்த வேண்டுமானால் ஆபரேஷன் செய்துகொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் வற்புறுத்தியதாலும் இந்த ஆபரேஷனை செய்துகொள்ள சிரஞ்சீவி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆபரேஷனுக்கு பிறகு சிரஞ்சீவி முழுமையாக 2 வாரங்கள் ஓய்வு எடுக்கவேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்களாம். அதனால், ஆபரேஷனுக்கு பிறகு 2 வாரங்களுக்கு எந்த பணிகளையும் சிரஞ்சீவி மேற்கொள்ளப் போவதில்லை என்றும் கூறப்படுகிறது.
சிரஞ்சீவி பூரண குணமடைந்தபிறகு ‘கத்தி’ படத்தின் ரீமேக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அனேகமாக மார்ச் இரண்டாவது வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என தெரிகிறது.