இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், கிரிக்கெட் ‘டெஸ்ட்மேஜ்’ கேப்டனுமான வீராட் கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை தீவிரமாக காதலித்து வந்தார்.
இருவரும் ஜோடியாக சுற்றினார்கள். முக்கிய விழாக்களில் ஜோடியாகவே பங்கேற்றனர். வீராட் கோலி விளையாடும் கிரிக்கெட் போட்டியை அனுஷ்கா சர்மா தவறாமல் சென்று பார்த்தார். மைதானத்தில் அவர் இருப்பதை டி.வி.யில். காட்டி ரசிகர்களை குதூகலப்படுத்தி வந்தனர்.
வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளுக்கும் கோலியுடன் அனுஷ்கா சென்று வந்தார். கோலி சதம் அடித்தால் அனுஷ்கா சர்மா ‘பிளையிங் கிஸ்’ கொடுத்து அவரை பரவசப்படுத்துவார்.
விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், கோலி – அனுஷ்கா சர்மா காதலில் விரிசல் ஏற்பட்டு பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விரைவில் திருமணம் செய்து கொள்வது பற்றி அனுஷ்கா சர்மாவிடம் கோலி சமீபத்தில் பேசி இருக்கிறார். ஆனால், அதற்கு ஒப்புக்கொள்ளாத அனுஷ்கா சர்மா, ‘என் கவனம் எல்லாம் சினிமா மேல்தான் இருக்கிறது’ என்று ஒரே போடாக போட்டு விட்டாராம்.
இது திருமண கனவில் இருந்த கோலிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், கோபம் அடைந்த அவர் அனுஷ்காவுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். டுவிட்டர், இன்ஸ்கிராம், சமூக வலைதள தொடர்புகளையும் துண்டித்து விட்டார். இதன் மூலம் இருவருடைய காதலிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது அம்பலமாகி இருக்கிறது. மீண்டும் சமரசம் ஏற்படுமோ? அல்லது விரிசல் அதிகமாகுமோ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.