இந்தியாவின் பங்களூரு நகரில் பள்ளிக்கூடம் ஒன்றுக்குள் நுழைந்த ஆண் சிறுத்தை கடித்ததில் 6 பேர் காயமடைந்தனர்.
ஞாயிறன்று அந்த சிறுத்தையை பிடிக்க முயன்றபோது காயமடைந்தவர்களில் ஒரு விஞ்ஞானியும் வனத்துறை அதிகாரியும் அடங்குகின்றனர்.
குண்டலகல்லி பகுதியில் ஒரு சர்வதேச பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்து உலாவிய அந்த சிறுத்தை முதலில் அமைதியாக காணப்பட்டது.
இந்தியாவில் 12,000 முதல் 14,000 வரையிலான சிறுத்தைகள் இருப்பதாக அண்மைய கணக்கெடுப்பு ஒன்று கூறுகின்றது.
அது ஒரு ஆளை தாக்குவதை பள்ளிக்கூட கமெரா படங்கள் காண்பிக்கின்றன.