இங்கிலாந்தில் மழைக்காலம் தொடங்கி ஒன்பதாவது முறையாக உருவாகியுள்ள புதிய புயல் காரணமாக அந்நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் பலத்த காற்றூடன் மழை பெய்து வருகிறது.
இமோகென் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் மணிக்கு 80 மைல் (சுமார் 130 கிலோமீட்டர்) வேகத்தில் கடலோர நகரங்களில் காற்று வீசியது.
இந்நிலையில் இமோகென் புயல் தாக்கத்தால் திங்கள்கிழமை காலை லண்டன் நகரில் பலத்த காற்று வீசியது. அப்போது மிலன் நகரில் இருந்து வந்த பயணிகள் விமானம் ஒன்று லண்டன் நகர விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஆனால் பலத்த காற்று காரணமாக விமானம் தரையை அடைவதற்கும் முன்பாக அங்குமிங்குமாக அலைகழிக்கப்பட்டது.
இதனால் விமானி விமானத்தை தரையிறக்காமல், மீண்டும் வானில் பறக்க செய்தார். விமானியின் சாமர்த்தியத்தால் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
வீடியோவில் பதிவாகியுள்ள இந்த காட்சிகள் பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் உள்ளது.