இந்திய அளவில் அதிகம் வசூலித்த இந்தியப்படம் என்ற பெருமையை பெற்றிருந்த படம் பாகுபலி. இப்படம் அமீர்கானின் பிகே படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
அதாவது மே மாதம் சீனாவில் வெளியாக அமீர்கானின் பிகே படத்திற்கு 4500க்கும் அதிகமான பிரிண்ட்கள் போடப்பட்டதாம். சீனாவில் அத்தனை பிரிண்டுகள் போடப்பட்ட முதல் படம் என்ற சாதனையை பெற்றிருந்தது. அந்த சாதனையை முறியடித்து தற்போது பாகுபலி படத்திற்கு 6000க்கும் அதிகமான பிரிண்ட்கள் போடப்பட்டிருக்கிறதாம்.
பாலிவுட் சினிமாவை பொறுத்தவரை இது ஒரு புதிய சாதனை. வரும் மே மாதம் பாகுபலி திரைப்படத்தை சீனாவில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.