ரஜினியின் லிங்கா பட பிரச்சனை அனைவரும் அறிந்ததே. இயக்குனர் ரவிரத்தினம் என்பவர் லிங்கா படக்குழுவினர் என்னுடைய கதையை திருடிவிட்டனர், எனவே படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கு நிலுவையில் இருக்கும் போதே ஜகோர்ட் உத்தரவை எதிர்த்து ராக்லைன் வெங்கடேஷ் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். அப்பீல் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 1 கோடி ரூபாய் மட்டும் வங்கி உத்தரவாதம் செலுத்தினால் போதும் என்றும், வங்கியில் டெபாசிட் செய்த பணம் 5 கோடி ரூபாயை ராக்லைன் வெங்கடேஷ் எடுத்துக்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டது.
மேலும், ரவிரத்தினம் தாக்கல் செய்துள்ள வழக்கை 6 மாதத்துக்குள் மதுரை கூடுதல் முன்சீப் கோர்ட்டு விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில், ராக்லைன் வெங்கடேஷ் மதுரை ஐகோர்ட்டு கிளையில் இந்த வழக்கை வேறொரு கோர்ட்டுக்கு மாற்றி விரைவில் விசாரித்து முடிக்க உத்தரவிட வேண்டும்’ என்று தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, ‘இயக்குனர் ரவிரத்தினம் தாக்கல் செய்த வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற இயலாது. மதுரை கூடுதல் முன்சீப் கோர்ட்டு இந்த வழக்கை 30.4.2016-க்குள் விசாரித்து முடிக்க வேண்டும். தினமும் விசாரணை என்ற அடிப்படையில் வழக்கை விசாரிக்கலாம்‘ என்று உத்தரவிட்டார்.