வேதாளம் படத்தின் வெற்றிக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்ட அஜித், இப்போது ஓய்வெடுத்து வருகிறார். அவரின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் தினம்தோறும் வந்துகொண்டே தான் இருக்கின்றன.
இயக்குனர் சிவாவோடு ஒரு படம், மற்றும் விஷ்ணுவர்தனோடு மற்றொரு படம் என இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.
விஷ்ணுவர்தன் படத்திற்கு பிரபல எழுத்தாளரான பாலகுமாரன் கதை எழுதி வருகிறார். அதை இயக்குனரே உறுதிபடுத்தியிருந்தார்.
முதல்முறையாக இந்த படத்தின் கதை பற்றி வாய் திறந்துள்ள பாலகுமாரன் “இது தஞ்சை பெரியகோயில் அல்லது ராஜராஜ சோழனைப் பற்றிய கதையோ அல்ல. ஆனால் ஒரு சோழ மன்னரைப் பற்றிய கதை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்” என தெரிவித்துள்ளார்.