வெண்ணிலா என்ற பெயரில் அந்த ஊரில் ஆசிரமம் இருப்பதை அறியும் எழுத்தாளர் மாயா, அவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள முயற்சிக்கிறார். அப்போது வெண்ணிலாவை பற்றிய குறிப்பு ஒரு டைரி மூலமாக அவருக்கு தெரிய வருகிறது. அந்த கிராமத்தில் வெண்ணிலா எந்தமாதிரியான கொடுமைகளை அனுபவித்தார். அந்த கொடுமைகளில் இருந்து வெண்ணிலா தப்பித்தாரா? இல்லையா? என்பது அனைத்துமே அந்த டைரியில் குறிப்பிட்டிருக்கிறது. இந்த அனுபவங்களை வெண்ணிலா அரங்கேற்றத்தின் முழு கதை.
சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ள மனிதர்களின் மறுபக்கங்களை இந்த படத்தில் இயக்குனர் முத்துக்குமார் அப்பட்டமாக தோலுரித்து காட்டியிருக்கிறார். ஆனால், இந்த கதையை படமாக்கும்போது நேர்த்தியாகவும், அதை சரியாக கொண்டு சென்று சேர்க்கும் முயற்சியிலும் தோல்வி கண்டிருக்கிறார். படத்தின் கதைக்கேற்ற வலுவான கதாபாத்திரங்கள் இல்லாதது படத்திற்கு மிகப்பெரிய இழப்பு.
படத்தில் நாயகனாக நடித்துள்ள தினேஷ் குமார் புதுமுகம் என்பதால் நடிப்பதற்கு சற்று சிரமப்பட்டிருக்கிறார். அதேபோல், நாயகி சமஸ்தி பார்க்க அழகாக இருக்கிறார். விபச்சாரி என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அதேநேரத்தில், அந்த கதாபாத்திரத்திற்குண்டான பளுவையும் தாங்கி கச்சிதமாக நடித்துள்ளார். படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனர் முத்துக்குமாரே நடித்துள்ளார். இவருடைய நடிப்பு ஓகே ரகம்தான்.
மற்றபடி படத்தின் ஒளிப்பதிவு படத்தை பார்ப்பதற்கு தடை போடுகிறது. பின்னணி இசையும் பெரிதாக எடுபடவில்லை. பாடல்களும், அதை படமாக்கி விதமும் சலிப்பை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் ‘வெண்ணிலாவின் அரங்கேற்றம்’ திருப்தியில்லை.