தனுஷ் எப்போதும் வித்தியாசமான முயற்சிகள் செய்வதை கடமையாக வைத்துள்ளார். ஒரு மாஸ் படம் கொடுத்தால் கண்டிப்பாக அடுத்து ஒரு கிளாஸ் வகை படம் தான்.
இந்நிலையில் கொடி என்ற மாஸ் படம் முடிந்த பிறகு ஒரு ஹாலிவுட் படம், வெற்றிமாறனின் வடசென்னை என அடுத்தடுத்து நடிக்கவுள்ளார்.
இதில் வடசென்னை கிட்டத்தட்ட 30 வருட கதையாம், இப்படம் 4 பாகங்களாக தான் வெற்றிமாறன் கதையை யோசித்து வைத்துள்ளாராம்.
ஆனால், அத்தனை பாகம் எடுக்க முடியுமா? என்று தெரியவில்லை, கண்டிப்பாக இரண்டு பாகங்களாக முதலில் ப்ளான் செய்துள்ளார்களாம். இப்படத்திற்காக தனுஷ் கிட்டத்தட்ட 250 நாட்கள் கால்ஷிட் கொடுத்து வைத்துள்ளாராம்.