இளைய தளபதி விஜய் யாருக்கு உதவி என்றாலும் முதல் ஆளாக வந்து உதவக்கூடியவர். இவர் தன் உதவியாளர் செல்வகுமாரையே புலி படத்தின் மூலம் தயாரிப்பாளராக்கி அழகு பார்த்தவர்.
ஆனால், புலி படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, இதனால், மிகவும் வருத்தமடைந்தார் செல்வகுமார். இத்தருணத்தில் தான் ஜீவா தன் அடுத்த படத்திற்கான கால்ஷிட் கொடுத்து, போக்கிரி ராஜா படம் உருவாக காரணமாக இருந்தார்.
இருந்தாலும் விஜய் படம் தோல்வியடைந்ததை எண்ணி வருத்தத்தில் இருந்த செல்வகுமாரிடம், ஏன் கவலைப்படுகிறீர்கள், மீண்டும் நாம் ஒரு படத்தில் இணைகிறோம் என கூறினாராம் தளபதி. இதனால், மீண்டும் பழைய உற்சாகத்துடன் செல்வகுமார் இருக்கின்றாராம்.