ஈழத்தின் சினிமா வளர்ச்சியின் அடுத்த படிக்கல்லாக வர்த்தக சினிமா என்ற குறிக்கோலுடன் கலை கலாச்சாரம் பொழுதுபோக்கு என அனைத்தும் ஒன்றினைத்து பல தடைகள் தாண்டி தாயராகிவரும் யாழ்தேவி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.யாழ்.கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் வைத்து தென்னிந்திய திரைப்பட நாயகி பூஜா வெளியிட்டு வைத்தார்.
யாழ்ப்பாணத்தினை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டு வரும் முழு நீள திரைப்படம் யாழ்தேவி.சண்டை, மற்றும் கலை அம்சங்களுடன் கூடிய இத்திரைப்படத்தினை ராஜஸ்ரோன் புரடக்சன் கந்தசாமியின் தயாரிப்பில் இணைத்தாயரிப்பாளரான இராஜேந்திரகுமார் மற்றும் தசரதன் அவர்களின் பங்களிப்பிலும் கந்தசாமி லோககாந்தன் இயக்கத்தில் லவன் சாரு றெஜி லிங்கம் தனா நிக்சன் இவர்களின் உதவி இயககத்திலும் சங்கர் கிரிஸ் நிரோசா மிதுனா மதிசுதா மற்றும் பலர் நடிப்பிலும் நவீன் கலைஇயக்கத்திலும் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
மிக பிரம்மாண்டமாக ஈழத்து வர்த்தக சினிமா என்ற ஒரே குறிக்கோளுடன் உருவாக்கிவரும் யாழ்தேவி திரைப்படம் எட்டு கோடி தமிழ் மககளின் இரசனையை அறிந்து இன்னும் சில மாதங்களில் வெளிவரவுள்ள நிலையில்.ஈழத்தில் அனைவராலும் தனது இசையில் வசப்படுத்தி வைத்தஇசையமைப்பாளர் சுதர்சன் அவர்களின் அழகிய இசையில் இந்திய இசையமைப்புக்கு நிகரான இசையை இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அவரின் இசையில் இந்திய பிரபல பின்னனி பாடகர்கள் சத்தியபிரகாஸ் வந்தனா சிறினிவசன் திவாகர் ஜெசிககா உடன் ஈழத்து புகழ் பூத்த முன்னனி பாடகர்கள் அருள் தர்சன்; யுபேஸ் மயுரசங்ர் ஜெயபவா தனுஸ் சிவி லங்கேஸ் அன்பு பானுகா நிசா சஞ்சீவன் இணைந்து இந்திய பின்னனி பாடகர்களுக்கு நிகரானவர்கள் என உலகறிய தமது திறமையை வெளிப்படுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.