தமிழ் சினிமாவின் இருக்கும் முன்னணி நடிகர்கள் எல்லாம் நயன்தாராவிற்கு ஜோடியாக நடிக்க காத்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் பார்த்திபன் நயன்தாராவுடன் நடிக்க மறுத்துவிட்டாராம்.
அப்படியா!!! என்றால் தற்போது இல்லை, நயன்தாரா முதன் முதலாக நடிக்க வேண்டிய படம் குடைக்குள் மழை படத்தில் தானாம்.
ஆனால், அவர் பார்த்திபன் சொன்ன நேரத்திற்கு வராததால் அவரை படத்திலிருந்து நீக்கிவிட்டாராம், இதன் பிறகு தான் அவர் ஐயா படத்தில் அறிமுகமாகியுள்ளார். இதை பார்த்திபன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும், நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் நயன்தாராவிடம் நல்ல வேலை நீங்கள் அந்த படத்தில் நடிக்கவில்லை, அப்படி நடித்திருந்தால் உங்கள் தலையெழுத்தே மாறியிருக்கும் என ஜாலியாக கூறியுள்ளார். அதான் பார்த்திபன்.