திருநாள், போக்கிரி ராஜா, கவலை வேண்டாம் என வரிசையாக படங்களில் நடித்து வருகிறார் ஜீவா. இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஜீவாவை நடிக்க கேட்டுள்ளனர்.
ஆனால், அவர் இதுக்குறித்து ஏதும் கூறவில்லை, சமீபத்தில் இப்படம் பற்றி பேசுகையில், ‘தனுஷே வடசென்னை படம் நடிப்பது குறித்து ஏதும் கூறவில்லை.
அந்த படம் எப்போது ஆரம்பிக்கும் என இன்னும் தெரியவில்லை, அப்படியிருக்க எப்படி நான் அந்த படத்தை பற்றி பேசுவது’ என கோபமாக பதில் கூறினாராம்.