இன்றைய கால சினிமா நடிகைகள் படத்தில் நடிப்பது, ஒரு சில நடிகைகள் அப்படத்தின் புரொமோஷன் விழாக்களில் கலந்து கொள்வது என்பதோடு இருந்து விடுவர்.
டப்பிங் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இருப்பர். ஆனால் இப்போதெல்லாம் நடிகைகள் தான் நடிக்கும் படங்களுக்கு டப்பிங் கொடுக்க முன்வந்துள்ளனர்.அதன் தொடக்கமாக நயன்தாரா, சமந்தா என தங்கள் படங்களில் டப்பிங் பேச ஆரம்பித்தனர்.
அவர்களை அடுத்து தற்போது தமன்னாவும் டப்பிங் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். தெலுங்கில் ஊபிரி படத்திலும், தமிழில் தர்மதுரை படத்திலும் டப்பிங் பேச இருக்கிறாராம்.