நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பல நல்ல படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் இந்தியில் அஸ்வினி ஐயர் என்ற இயக்குநர் இயக்கிய “நில் பேட்டே சனாட்டா” என்ற திரைப்படத்தை அமலா பால், ரேவதி மற்றும் பலர் நடிப்பில் அம்மா கணக்கு என்ற பெயரில் தமிழில் தயாரித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவுபெற்றது, தனுஷ் தயாரித்த படங்களிலே கிட்டத்தட்ட 45 நாட்களில் (ஜனவரி 6ல் தொடங்கி நேற்றுடன் (பிப்ரவரி 23ல்) முடிக்கப்பட்ட முதல் படம் இது.
மேலும் இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஏப்ரல் மாதம் வெளியிடுவதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.