விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தெறி’. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இது இவரது 50வது படமாகும். இதனால் இப்படத்தின் பாடல்கள் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமீபத்தில் இப்படத்திற்குகாக கடுமையாக உழைத்து வருகிறேன் என்று ஜி.வி.பிரகாஷ் கூறியிருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் பாடல் வரிகளை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டிருக்கிறார். ‘ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி…. தொப்பியில சிங்கத்த பாரேன், தோளுல ஸ்டார வாங்கும் போலீசு காரன்… என்ற பாடல் வரிகளை வெளியிட்டிருக்கிறார். மேலும் இந்த பாடல் மட்டும் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
அட்லி இயக்கி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளார்கள். கலைப்புலி தாணு இப்படத்தை தயாரித்து வருகிறார். ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.