இது என்ன மாயம்’ படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் ‘வாகா’, ‘வீரசிவாஜி’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. தற்போது ‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரனின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘அச்சம் என்பது மடமையடா’ மஞ்சிமா மோகன் நடித்து வருகிறார். இப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா தத்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர். சமீபத்தில் வெளியான அருள்நிதியின் ‘ஆறாது சினம்’ படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை பிரம்மாண்டமாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.