ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சார்பு நீதிபதி, தன் உள்ளாடைகளை ஒழுங்காக துவைக்காத அலுவலக பெண் ஊழியர் ஒருவருக்கு மெமோ கொடுத்ததாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவி வருகிறது.
அப்படி கொடுக்கப்பட்ட மெமோவில், ” உள்ளாடைகளை துவைக்க அருவருப்படைகிறீர்கள். இதற்காக உங்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது ? ” என்று விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த மொமோ கொடுத்த 7 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதற்கு அந்த அலுவலக பெண் உதவியாளர் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி கொடுத்த மெமொவுக்கு 4-ம் தேதி மன்னிப்பு கேட்டு கொடுத்த கடிதமும் இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது.