ஒரு படத்தில் ஒன்று அல்லது இரண்டு, மூன்று பேர் புதுமுகங்களாக நடிப்பார்கள். ஆனால், ‘பதனி’ என்னும் பெயரில் தயாராகி வரும் படத்தில் 120 புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஆர்.ஜே.பிரகாஷ் இயக்கியுள்ள இப்படத்தை ஜின்னா பிரதர்ஸ் சார்பாக ஜே.உத்தமன் தயாரித்து வருகிறார்.
இதில் சுபாஷ், பரணிதரண், பூவை அருண், ராக்கேஷ், கிளார் குரு, ஹிமோனா, பானு, கோமதி, பிரியா, மதுமிதா உள்ளிட்ட 120 க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜவுளி கடையின் உரிமையாளரின் மகன் சிரஞ்ஜீவி அதே பகுதியில் வாழும் வேலாதயுதத்தின் மூலம் பாதிக்கப்படுகின்றான். வட்டி தொழில் செய்து வரும் வட்டி ராஜ் அதே பகுதியில் உள்ள முகேஷ் மூலம் பாதிக்கப்படுகின்றான். ஊரை காப்பாற்றிக் கொண்டு இருக்கும் அரளிகுமார் மற்றும் அவரது நண்பர்களும் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த மூன்று பாதிப்புகளும் ஒரு நேர் கோட்டில் சந்திக்கும்போது அங்கே ஒரு திருட்டும் கொலையும் நடக்கிறது. திருடியது யார் கொலை செய்தது யார் என்பதை கண்டுபிடிக்கும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். கிராம பின்னணியில் படத்தை உருவாக்கி வருகிறார்கள். விரைவில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.