‘நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் இடம் உதவியாளராக இருந்தவர், முத்துப்பாண்டியன். இவர் இயக்கும் புதிய படம் ‘நிரஞ்சனா’. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பவர், பாரதா நாயுடு.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர் தமிழ் படங்களில் நடிப்பத்தில் அதிக ஆர்வமாக இருக்கிறார். இது பற்றி கூறிய பாரதா நாயுடு…
நான் தெலுங்கில் ‘கேப்பி மேரீட் லைப்’ ‘ரிலேஷன்ஷிப்’ படங்களில் நடிக்கிறேன். தமிழில் ‘தேன் மிட்டாய்’ படத்தில் அறிமுகமானேன் ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்திலும் நடிக்க இருக்கிறேன்.
எனக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் தெரியும். என்றாலும், தமிழ் படங்களில் நடிக்க அதிக ஆர்வமாக இருக்கிறேன். குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிப்பேன். காட்சிக்கு முக்கியம் என்றால் முத்தக்காட்சியில் நடிப்பதற்கும் எனக்கு தயக்கம் இல்லை. அனைத்து நடனங்களும் பயன்றிருக்கிறேன்.
இயக்குனர்கள் பாலா, மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க வேண்டும், தீபிகா படுகோனே, வித்யாபாலன் போன்று அழுத்தமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை.
அடுத்து தமிழில் ‘மஞ்சள்அறு’, ‘ரெண்டுகேடி’, ‘முணுகோடி’ ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறேன். தமிழ் படங்களில் அதிகமாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும். என்பது லட்சியம் அதற்கு ரசிகர்கள் ஆதரவு வேண்டும்’ என்றார்.