‘கத்தி’ வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் சோனாக்ஷி சின்ஹா, இயக்குனர் அனுராக் கஷ்யாப், லட்சுமி ராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘அகிரா’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். அனைத்து படப்பிடிப்பும் முடிந்து, இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழில் வெளிவந்த ‘மெளனகுரு’ படத்தின் ரீமேக்காக ‘அகிரா’ படத்தை இயக்கியிருக்கிறார்.
இப்படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான முதற்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். மகேஷ்பாபு நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இப்படத்தில் மகேஷ்பாபுவுக்கு வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இப்படத்தில் நடிப்பது குறித்து எஸ்.ஜே.சூர்யா இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. விரைவில் ஒப்பந்தமாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.