உலக கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா – மேற்கிந்திய அணிகள் இடையே அரைஇறுதி நடக்கும் மும்பை வான்கடே மைதானத்தின் தன்மை எப்படி இருக்கும் என்ற விவரம் கசிந்துள்ளது.
முந்தைய ஆட்டங்களை போல் இது முழுக்க முழுக்க துடுப்பாட்ட வீரர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்காது என்று தெரிகிறது.
‘‘இங்கு நடந்த முந்தைய போட்டிகளுடன் ஒப்பிடும் போது, இந்த ஆட்டத்திற்குரிய ஆடுகளம் மெதுவாக (ஸ்லோ) இருக்கும். ஏனெனில் இங்கு சமஅளவில் புற்கள் உள்ளன. அதே நேரத்தில் 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு சிறந்த ஆடுகளமாகவே காணப்படும்’ என்று பிட்ச் பராமரிப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.