நடிகை வீட்டில் மர்ம நபர்கள் திடீரென புகுந்து வீட்டையும், நடிகையின் மீதும் தாக்குதல் நடத்தியதாக வந்த செய்தியால் மன உளைச்சலில் இருக்கிறாராம் நடிகை.
நயனமான நடிகையுடன் இரண்டு படங்களில் தொடர்ந்து நடித்த உதயமானவர், அப்போதே நடிகையுடன் காதல் வயப்பட்டதாக செய்திகள் வந்தது. தனது காதலை ஏற்க மறுத்ததால் உதயமானவர் தற்கொலை வரைக்கும் சென்றதாக செய்திகள் எல்லாம் வெளிவந்தது. ஆனால், அவை எல்லாம் வெறும் வதந்திதான் என்றும் பின்னாளில் செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில், இன்று நயனமான நடிகை வீட்டில் மர்ம நபர்கள் திடீரென புகுந்து வீட்டையும், நடிகையின் மீதும் தாக்குதல் நடத்தியதாக ஒரு செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவியது. இந்த தாக்குதலை நடத்தியது உதயமானவரின் ஆதரவளர்கள்தான் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இந்த செய்தி பரவிய வேகத்திலேயே அடங்கியும் போனது.
தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நடிகையின் வீட்டுக்கு சென்று விசாரித்து பார்த்ததில் அப்படியொரு சம்பவம் இங்கு நடைபெறவில்லை என்றும், நடிகை தற்போது சென்னையிலேயே இல்லை என்றும் கூறுகிறார்கள். ஆனால், இப்படியொரு வதந்தியை யார் கிளப்பி விட்டார்கள் என்றும் நடிகைக்கு புரியாத புதிராகவே இருக்கிறதாம்.
தான் உண்டு, தம் வேலையுண்டு என இருக்கும் பட்சத்தில் யார் இப்படியெல்லாம் வதந்தியை கிளப்பி விடுகிறார்கள் என்று நடிகை மிகவும் மன உளைச்சலில் இருக்கிறாராம்.