முதல் தகவல் அறிக்கை படத்தின் படப்பிடிப்பை பார்க்க வந்த முஜீப்பை, இயக்குனர் பா.ராஜகணேசன் நடிக்க வைத்திருக்கிறார்.
விலாசம் படத்தை இயக்கிய பா.ராஜகணேசன் இப்போது எடுத்து வரும் படம் ‘முதல் தகவல் அறிக்கை’. இந்த படத்தில் ராயன், கல்பனா என்ற புதுமுகங்கள். நாயகன், நாயகியாக நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு தஞ்சையை அடுத்துள்ள மன்னார்குடியில் நடந்தது. அதை ஏராளமானோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களில் முஜீப் என்பவர் அச்சு அசலாக நடிகர் கிஷோர் போலவே இருந்தார். அவரை அதிசயமாக பார்த்த இயக்குனர். அந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்க முடியுமா என்று கேட்டார். உடனே முஜீப் அதை மகிழ்ச்சியுடன் ஏற்று இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கத் தொடங்கினார்.
முஜீம் ஏற்கனவே பலமுறை நடிக்க வாய்ப்பு தேடியதும், கிடைக்காததால் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றதும் தெரிய வந்தது. படத்தின் கதையை கேட்ட முஜீப் இப்போது முதல் தகவல் அறிக்கை, படத்தை தானே தயாரிப்பதாக கூறி விட்டார். இதனால் இயக்குனர் பா.ராஜகணேசன் மகிழ்ச்சியில் இருக்கிறார்.