பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான நடிகை பிரியங்கா சோப்ரா மூன்று முறை தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது முன்னாள் மேலாளர் பிரகாஷ் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
திரையுலகில் அவர் காலூன்ற கடுமையாக போராடிய காலங்களில் மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும், தான் தடுத்து நிறுத்தியதாகவும் கூறியுள்ளார். ஒரு முறை மாடியில் இருந்து குதிக்க பிரியங்கா முயன்றபோது, ஜன்னல் கதவுகளை மூடி, அவரை நாற்காலியுடன் கட்டிப்போட்டு சிறை வைத்ததாகவும், காதலர் அசிம் மெச்சனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரியங்கா சோப்ரா மனமுடைந்து காணப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மேலாளர் பிரகாஷ் தகவல்கள் குறித்து பிரியங்கா தரப்பிலிருந்து இதுவரை பதில் ஏதும் வரவில்லை.