எழுத்தாளரும் வரலாற்றாசிரியருமான வில்லியம் டால்ரிம்பிள் கடந்த 18 மாதங்களில் தான் மேற்கொண்ட பயணங்களின்போது எடுத்த கறுப்பு – வெள்ளை புகைப்படங்களை தி ரைட்டர்ஸ் ஐ என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார்.
சிறு வயதிலிருந்தே தனக்கு புகைப்படக் கலையின் மீது ஆர்வம் இருந்ததாகக் கூறுகிறார் வில்லியம் டால்ரிம்பிள்.
வில்லியம் டால்ரிம்பிளின் புகைப்படங்கள் கோவாவில் சுனபரந்தாவிலும் தில்லியில் வதேரா ஆர்ட் கேலரியிலும் காட்சிக்கு வைக்கப்பட்டன. லண்டனில் உள்ள க்ரோஸ்வெனோர் கேலரியில் ஜூன் மாதத்தில் காட்சிக்கு வைக்கப்படவிருக்கின்றன.