நடிகை குஷ்பு தற்போது தீவிர அரசியலில் ஈடுப்பட்டு வருகின்றார். சமீபத்தில் இவர், திருநங்கைகள் அரசியலில் ஈடுபடுவது குறித்து சர்ச்சையான கருத்தை கூறினார்.
இதனால், கோபமான திருநங்கைகள் சென்னையில் பல பகுதிகளில் குஷ்புவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுக்குறித்து குஷ்பு ’இந்த சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாம், இது தொடர்பாக நான் கருத்து கூற விரும்பவில்லை’ என கூறியுள்ளாராம்.