இந்தியாவில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் ரயில் தனது முதல் பயணத்தை நேற்று தொடங்கியுள்ளது.
டெல்லி நிஜாமுதீனையும் ஆக்ராவையும் இணைக்கும் கதிமான் எக்பிரஸ் என்ற இந்த ரயிலை ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.
இந்த இரு நகரங்களுக்கு இடையில் உள்ள 200 கி.மீ. தூரத்தை, இந்த ரயில் 100 நிமிடங்களில் கடக்கும்.
தற்போதுவரை, 130 கி.மீ. வேகத்தில் செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்தான் இந்தியாவிலேயே அதிவேகத்தில் செல்லும் ரயிலாகும்.
தற்போது இந்திய ரயில்கள் சராசரியாக மணிக்கு 60 கி.மீ. வேகத்தில்தான் செல்கின்றன.
ஜப்பானில் மணிக்கு 603 கி.மீ. வேகத்தில் ரயில்கள் ஓட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் கதிமான் எக்ஸ்பிரஸ் வெள்ளிக்கிழமை தவிர, வாரத்திற்கு ஆறு நாட்கள் இயங்கும்.
இந்த ரயிலில் பல்வேறு விதமான உணவுகள், இலவச வைஃபை, பொழுதுபோக்கு ஆகியவை உள்ளன.
இந்திய ரயில்வே உலகின் மூன்றாவது மிகப்பெரிய ரயில் சேவையாகும்.