அமர்க்களம், தாம்தூம், இந்திரலோகத்தில் நா.அழகப்பன் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் பிரபு. இவர் மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்திருக்கிறார்.
வாத்தியார், அமர்க்களம், தாம்தூம், இந்திரலோகத்தில் நா.அழகப்பன், ஏன் இந்த மயக்கம் உள்பட ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருப்பவர் பிரபு (வயது 52).
இவர் நம்மாழ்வார் பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று காலை 5.30 மணியளவில் பிரபுவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். மறைந்த நகைச்சுவை நடிகர் பிரபுவுக்கு பிரபா (38) என்ற மனைவியும், அஜீத் குமார் (15), தமிழ் செல்வன் (10) என்ற மகன்களும் உள்ளனர்.
நேற்று மாலை ஓட்டேரி சுடுகாட்டில் இறுதிச்சடங்கு நடைபெற்றது.