மும்பையை சேர்ந்த பிரபல டி.வி. நடிகை பிரதியுஷா(வயது24). இவர் சமீபத்தில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது காதலனும், டி.வி. தொடர் தயாரிப்பாளருமான ராகுல் கொடுத்த சித்ரவதை காரணமாக அவர், இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ராகுல் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து ராகுல் முன்ஜாமீன் கேட்டு தின்தோஷி செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். கோர்ட்டு அவரது மனுவை தள்ளுபடி செய்தது. எனவே அவர் முன்ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி மிருதலா பாத்கர் முன் நடைபெற்றது.
அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, ராகுலுக்கு ஏப்ரல் 18-ந்தேதி வரை இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.