ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் அர்துனா பகுதியைச் சேர்ந்தவர் காந்திலால் கதாரா (வயது 36). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணை காதலித்து வந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் காதல் ஜோடி, வீட்டை விட்டு வெளியேறி குஜராத்தில் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் காதலியின் தந்தை கேட்டுக்கொண்டதையடுத்து காதல்ஜோடியினர் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு திரும்பினர். அப்போது காதலியின் தந்தை மற்றும் சிலர், காதல் ஜோடியை மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்தனர்.
தகவல் அறிந்த பொலிசார் விரைந்து வந்து இருவரையும் காப்பாற்றினர். இது தொடர்பாக பெண்ணின் தந்தை உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.