நடிகர் சங்கம் சார்பில் சமீபத்தில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் நிறைவு விழாவின்போது, கமல் தனது புதிய படத்தை புதிதாக அமையவிருக்கும் நடிகர் சங்கத்தில் தொடங்கப் போவதாக அறிவித்தார். அந்த அறிவிப்பைத் தொடர்ந்து அதை செயல்படுத்தவும் தொடங்கியுள்ளார்.
கமல் பிரபல இயக்குனர் டி.கே.ராஜீவ்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் உருவாகவிருக்கிறது. இப்படத்தை லைக்கா நிறுவனம் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவிருக்கிறது.
இப்படத்தின் தொடக்க விழாவை தி.நகரில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் நடிகர் சங்க வளாகத்தில் வைத்து நடத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தொடக்கவிழா வருகிற ஏப்ரல் 29-ந் திகதி நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் நடிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கமல்ஹாசன் திரைக்கதை எழுதுகிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசனும், ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.