சில நாட்களாகவே ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் கங்கனா ரனாவத் இருவருக்குமிடையே போலீஸ், வக்கீல் நோட்டீஸ்கள்,வழக்குகள் என கார சார பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. பகிரங்க மெயில்கள் வெளியீடு, நோட்டீஸில் சரமாரியான கேள்விகள் என பிரச்னை வலுத்துக்கொண்டே இருக்கிறது.
தற்போது இருவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. ஒரு பார்ட்டியில் கலந்துகொண்ட இருவரும் கட்டிப்பிடித்த நிலையில் உள்ள புகைப்படத்தில் ஹ்ருத்திக் கங்கனாவை சாய்த்துப் பிடித்திருக்க , அவர் சிரித்தபடி நிற்கிறார். இந்நிலையில் இந்தப் புகைப்படம் யார் மூலம் வெளியானது என்னும் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இதற்கு ஹ்ருத்திக்கின் மனைவி சூஸன் என்ன நினைக்கிறார்? என்ன சொல்வார்? என ஒரு பக்கம் மீடியாக்கள் பிரச்னைகளைக் கிளப்ப அதற்கு சூஸன் ட்விட்டரில் பதிலளித்துள்ளார். “நான் என்ன நினைக்கிறேன் என உங்களால் கண்டறியவே முடியாது. யோசித்துக்கொண்டே இருங்கள்.. மேலும் இந்தப் பிரச்னையில் என்னையோ , என் குழந்தைகளையோ தேவையில்லாமல் இழுக்க வேண்டாம்” என ஆவேசமாகக் கூறியுள்ளார்.