ஜெர்மனியில் பீர் விற்கப்படும் விலையை கூட்டு சதியின் மூலம் நிர்ணயம் செய்த, பல பல்பொருள் அங்காடிகளிடமிருந்து நூறு மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெருநிறுவனங்கள் தமக்குள் பேசிக்கொண்டு விலையை நிர்ணயம் செய்தன என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் எடிகா, நெட்டோ, மற்றும் மெட்ரோ உட்பட தொடரங்காடிகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் பல்வேறு பொருட்களின் விலைகளை தமக்கு சாதகமான வகையில் நிர்ணயம் செய்திருந்தன என்று அரசின் விலை கண்காணிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் ஜெர்மனியின் பீர் சந்தையை அந்த அலுவலகம் கண்காணித்து வந்தது. பின்னர் விசாரணைகளை முன்னெடுத்தது.
இதுமட்டுமன்றி ஹரிபோ இனிப்புகளின் விலை நிர்ணயம் தொடர்பில், மற்றொரு முன்னணி பல்பொருள் அங்காடியான லிடிலுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.