அதர்வா தற்போது ‘செம போத ஆகாத’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அதர்வாவின் முதல் படமான ‘பாணா காத்தாடி’ படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கி வருகிறார். அதர்வாவே தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இப்படத்திற்காக பெப்பி சாங் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் யுவன். இந்த பாடலை கர்நாடகாவில் உள்ள பாபா புதங்கிரி மலைப்பகுதியில் படமாக்கியுள்ளனர். பொதுவாக பாடல் காட்சி என்றால் நடன இயக்குனர்களை கொண்டுதான் உருவாக்குவார்கள். ஆனால், இந்த பாடலை ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயனை வைத்து படமாக்கியிருக்கிறார்கள்.
அதாவது இந்த பாடலை சண்டைக் காட்சிக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்காக அதர்வா மிகவும் கடினமான சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறாராம். இந்த பாடலை விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.