பல படங்களில் ஹீரோவாக நடித்த விஜயகாந்த் தேமுதிக கட்சி என்ற கட்சியை தொடங்கினார். அதன் பிறகு, அரசியலில் அதிக ஈடுபாடோடு செயல்பட்டு வந்ததால் சினிமாவுக்கு முழுக்கு போட்டிருந்தார். சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இவர், யாரும் எதிர்பார்க்கப்படாத அளவிற்கு தோல்வி அடைந்தார்.
அதனால், அரசியலுக்கு தற்போது சிறிது காலம் முழுக்கு போட்டுவிட்டு திரைத்துறைக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார் விஜயகாந்த். இவரின் மகன் சண்முகப்பாண்டியன் தற்போது ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜயகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பில் விஜயகாந்த் தற்போது கலந்து கொண்டுள்ளார்.
இதை தன்னுடைய அதிகாரப்பூர்வமான பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டிருக்கிறது.