ராஜஸ்தானை சேர்ந்த ஒரு நகரத்தில் 51 செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் வானிலை பதிவு ஆவணப்படுத்தப்படத் தொடங்கிய காலத்தில் இருந்து பதிவாகியிருக்கும் மிக அதிக பட்ச வெப்பநிலை இது தான் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் தற்போது வெப்ப அலை நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில், பாலைவன மாநிலமான, ராஜஸ்தானில் உள்ள இந்த பஹலோடி என்னும் நகரில் இந்த அதிக பட்ச வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
இதற்கு முந்தைய அதிக பட்ச வெப்ப நிலையானது 1956ல் பதிவாகிய 50.6 செல்சியஸ் ஆகும்.
வட இந்தியாவின் பெரும்பகுதிகளில் கடந்த பல வாரங்களாக வெப்ப நிலை 40 செல்சியஸைத் தாண்டி, அங்கு வெப்ப அலை வீசுகிறது.
இந்தியாவில் பருவமழையை எதிர்நோக்கும் வாரங்களில் நல்ல சூரிய வெளிச்சமும், வெப்பம் அதிகரிக்கும் நிலை இருப்பதும் இயல்பு.
ஆனால் உயிருக்கு ஆபத்தான அளவில் வெப்பநிலை , 50 செல்சியசை தாண்டுவது வழக்கத்துக்கு மாறானதாகும்.
”வியாழக்கிழமை பதிவான உச்சபட்ச வெப்பமானது, இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களின் பெரும்பகுதிகளில் இந்த வாரம் முழுவதும் கடுமையான வெப்ப அலை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விதித்துள்ளது.
அதிக பட்ச வெப்ப நிலை 45 செல்சியசை தொடும் போது அல்லது கடந்த ஆண்டுகளின் சராசரியை விட ஐந்து டிகிரி அதிக அளவை எட்டும்போது வெப்பஅலை இருப்பதாக இந்தியா அறிவிகின்றது.
இந்த ஆண்டின் கோடை காலத்தில் , தென்னிந்தியாவின் தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், இந்த வெப்ப அலை, பல டஜன் கணக்கான உயிர்களை குடித்துள்ளது.
பருவமழைக் காலத்தின் வருகை மட்டும் தான் வெப்பநிலையில் இருந்து நிரந்தர நிவாரணம் கொடுப்பதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது ஜூன் மாத மத்தியில் தான் வரும்.