டெல்லியைச் சேர்ந்த பிரதிமா தேவி (வயது 65) என்ற பெண் தினமும் 400 தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருகிறார்.
இவரின் இந்த மனிதாபிமான செயல் பலரையும் கவர்ந்து உள்ளது. தற்போது நாய்களுக்கு உணவளிக்கும் இவரது வீடியோ வைரலாகி உள்ளது.
டெல்லியில் உள்ள தெரு நாய்களின் நன்மைக்காக தனது வாழ்க்கையை இவர் அர்ப்பணித்து உள்ளார்.
இது குறித்து பிரதிமா தேவி கூறும் போது :- இவைகளுடன் வாழ்வதை நான் மிகவும் மகிழ்ச்சியாக கருதுகிறேன்.நான் எனது கணவருடன் இருந்த போது நான் மகிழ்ச்சியாக இருந்தது இல்லை. நான் தினமும் வேலை செய்து தான் எனது குடும்பத்தை நடத்துகிறேன். எனது கணவர் வேலை செய்யவில்லை. எனது மகன் என்னை அவனுடன் இருக்க என்னை அழைத்து வருகிறான். எனக்கு இந்த கிராமத்தில் இருக்கத்தான் விருப்பமாக உள்ளது. நான் நாய்களுக்கு நன்மை செய்யவே விரும்புகிறேன்.