கொல்கத்தாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடன அழகியாக 28 வயது பெண் பணியாற்றி வந்தார். அவர் வெளியூரை சேர்ந்தவர். பாகுகதி என்ற இடத்தில் ஒரு வீட்டில் தங்கி இருந்து தினமும் வேலைக்கு சென்று வந்தார்.
அவர் கொல்கத்தாவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அவருக்கு அந்த ஓட்டலுக்கு செல்லும் வழி தெரியவில்லை. எனவே அங்குள்ள வாலிபர் ஒருவரிடம் முகவரி கேட்டார். ஆனால் அவர் அந்த பெண்ணை தவறான இடத்துக்கு முகவரியை கூறி அங்கு செல்லும்படி கூறினார்.
அதன்படி அந்த இடத்துக்கு சென்றார். அந்த நேரத்தில் அந்த வாலிபர் ஒரு காரில் 5 பேருடன் அங்கு வந்தார். அவர்கள் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக காருக்குள் இழுத்து கடத்தி சென்றனர். காருக்குள் வைத்தே அவரை 5 பேரும் கற்பழித்தனர்.
பின்னர் அதிகாலை நேரத்தில் அந்த பெண்ணை சால்ட்லேக் பகுதியில் ஒரு புதரில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாடகை கார் டிரைவர் ஒருவர் அந்த பெண்ணை பார்த்துவிட்டார். அவர் அந்த பெண்ணை பத்திரமாக அழைத்து சென்று அவர் வசித்த வீட்டில் கொண்டுவிட்டார்.
பின்னர் இதுதொடர்பாக அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார். அவரை கற்பழித்தவர்கள் யார்? என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இளம்பெண் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கொல்கத்தாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2012-ம் ஆண்டு கொல்கத்தாவில் இதேபோன்று ஆங்கிலோ இந்திய பெண்ணை 5 பேர் கடத்தி சென்று கற்பழித்த சம்பவம் நடந்தது. அதுபோல இந்த சம்பவமும் நடந்திருக்கிறது.