அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான ‘ஆல் இஸ் வெல்’ படத்தோல்விக்கு பிறகு அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘ஹவுஸ்புல்–3’. இதில் அபிஷேக் பச்சனுடன் ரித்தேஷ்முக், அக்சய்குமார் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் நடித்த அனுபவங்களை அவர் நிருபர்களிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது பிரபல நடிகர்களின் வாரிசு என்பதால் எளிதாக வெற்றி பெற முடியுமா என்று கேட்கப்பட்டது. பதில் அளித்த அபிஷேக்பச்சன்…
“பிரபல நடிகர்களின் வாரிசு என்றால் அவர்கள் வெற்றி பெற முடியும் என்பது தவறான கண்ணோட்டம். யார் என்றாலும் திறமை இருந்தால்தான் ஜெயிக்க முடியும். பிரபல நடிகர்களின் வாரிசுகள் மட்டுமல்ல, மற்ற நடிகர்களுக்கும் இது பொருந்தும். திறமைதான் வெற்றியை தரும். படங்கள் தோல்வியாக அமைந்தால் அவர்களுக்கு படவாய்ப்பு கிடைப்பது சிரமம்தான்.
இன்றைக்கு என்னைப் பாருங்கள். பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருக்கிறேன். தோல்வி படத்தை கொடுக்க வேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை. ஒவ்வொரு நடிகரும் வெற்றிக்காக கடுமையாக உழைக்கிறார்கள். அதில் சிலருக்கு வெற்றி கிடைக்கிறது. சிலருக்கு தோல்வி கிடைக்கிறது” என்று கூறியுள்ளார்.