உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்தவர் அப்தாப் (வயது 30) அவரது மனைவி பெயர் ஆயிஷா (வயது 24) ஆகிய இருவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணம் செய்து கொண்ட நாள் முதல் மனைவியை வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார் அப்தாப். இதனால் மனைவி தரப்பில் இருந்து பணம் ஏதும் தேறாது என்று தெரிந்ததும் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார்.
இந்நிலையில் நேற்று மனைவியிடம் அன்பாக இருப்பது போல் நடித்துள்ளார். மனைவியை கங்கை ஆற்றுக்கு கூட்டி சென்று அதன் முன் செல்பி எடுக்கலாம் என்று கூறியுள்ளார். கணவனின் திட்டத்தை அறியாத ஆயிஷா கணவன் ஆசையாக கூப்பிட்டதால் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொண்ட அப்தாப் கட்டிய மனைவி என்று பார்க்காமல் திடீரென ஆற்றில் தள்ளிவிட்டு கொலை செய்தார்.
இது குறித்து வீட்டில் உள்ளவர்களிடம் ஆயிஷா கங்கை ஆற்றில் தவறி விழுந்து விட்டார் என்று கூறி உள்ளார். இதுகுறித்து ஆயிஷாவின் சகோதரர் புகார் அளித்தார். அதில் அப்தாப் மீது சந்தேகம் இருப்பதாக கூறினார். அப்தாப்பை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
முதலில் போலீசாரை திசை திருப்பும் வகையில் கதை கட்டினார். அதில் எங்களிடம் சிலர் கொள்ளை அடிக்க முயன்றனர். அப்போது, எனது மனைவியை அவர்கள் ஆற்றினுள் தள்ளி விட்டனர் என்று போலீசாரிடம் கூறினார். ஆனால் ஆயிஷாவின் சகோதரர் தனக்கு அப்தாப் மீது தான் சந்தேகம் இருப்பதாக உறுதியாக கூறினார். அதனை தொடர்ந்து, அப்தாப்பிடம் போலீசார் உரிய வகையில் விசாரணை நடத்தினர்.
அப்போது மனைவியை நான் தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டார். ஆற்றினுள் இருந்து ஆயிஷாவின் சடலத்தை மீட்டுள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.