பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் அப்பர்தேவா கிராமத்தை சேர்ந்த மாணவி மரியா சதகத் (வயது 19). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார்.
இந்த பள்ளியின் முதல்வர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றிருந்தார். அவர் மரியா சதகத்தை திருமணம் செய்ய விரும்பினார். இதுபற்றி அந்த மாணவியிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார். ஆனால் மரியா சதகத்தை விட பள்ளி முதல்வர் 2 மடங்கு வயது மூத்தவர்.
எனவே அவரை திருமணம் செய்ய மரியா சதகத் மறுத்தார். அவரை பள்ளி முதல்வரும் மற்றும் 4 பேர் சேர்ந்து சித்ரவதை செய்து திருமணத்துக்கு சம்மதிக்க வற்புறுத்தினார்கள். ஆனாலும் அவர் மறுத்துவிட்டார்.
இதனால் கோபம் அடைந்த அவர்கள் மரியா சதகத் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனாலும்சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். பள்ளி முதல்வர் உள்ளிட்ட மற்ற 4 பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை தேடிவருகிறார்கள்.