சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ்-ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான ‘பென்சில்’ படத்தில் பள்ளி ஆசிரியை வேடத்தில் வந்து அனைவரது கவனத்தையும் பெற்றவர் சுஜா வருணி. இவருக்கு வசீகரமுகமும் நடிப்புத்திறனும் இருந்தும் இன்னும் ராமனின் கால் பட அகலிகை கல்லாகக் காத்திருந்தது போல நல்ல வாய்ப்புக்காக பொறுமையாக காத்திருக்கிறார்.
இது பற்றி சுஜா வருணி கூறும் போது, ‘எனக்குப் புலம்பும் எண்ணமும் இல்லை. ஆதங்கமும் இல்லை. மற்றவர் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமைப்படும் குணமும் எனக்கு இல்லை.
நான் இப்போது நல்ல பார்முக்கு வந்து இருக்கிறேன். வருகிற வாய்ப்புக்கு முழு அர்ப்பணிப்பு தர நான் தயாராக இருக்கிறேன். ‘பென்சில்’ படத்தில் நான் கதாநாயகி இல்லை என்றாலும் படம் முழுக்க வருவேன். கதையில் சஸ்பென்ஸ் முடிச்சில் என் கேரக்டர் இருக்கும். அதைப் பார்த்த பலரும் என்னிடம் அன்புடன் விசாரித்துப் பேசுகிறார்கள்.
என் சமூக வலைதளங்களில் தினமும் 200 பேராவது கருத்து சொல்கின்றனர். உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. நண்பர்களும் அக்கம் பக்கம் உள்ளவர்களும் உறவினர்களும் பாராட்டுகின்றனர்.” என்கிறார்.